News February 13, 2026
தருமபுரியில் இரவு முழுவதும் துடிதுடித்து பலி!

புதூரை சேர்ந்த காய்கறி வியாபாரி வெங்கடேஷ் குமார் (31). இவர் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடித்து விட்டு பைக்கில் அதிவேகமாக சென்று கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக் தடுப்பு சுவரில் மோதி தூக்கி வீசப்பட்டார். இரவு முழுவதும் துடித்த இவரை நேற்று காலை பொதுமக்கள் பார்த்து ஏ.பள்ளிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விசாரணையில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தது தெரியவந்தது.
Similar News
News February 16, 2026
தருமபுரி: ஹோட்டல், டிபன் கடை தொடங்க ரூ.50,000 கடன்!

மத்திய அரசின் அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் மூலம் ஹோட்டல், டிபன் கடை, கேட்டரிங் தொழில் தொடங்க பெண்களுக்கு ரூ.50,000 கடன் உதவி வழங்கப்படுகிறது. இந்த கடன் தொகையை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் (36 மாதங்கள்) கால அவகாசமும் வழங்கப்படுகிறது. கடனுக்கான முதல் தவணையை செலுத்த தேவையில்லை. மேலும் தகவல்களுக்கு மாவட்ட சமுக நல அலுவலரை (04342-233088) தொடர்பு கொள்ளவும்.
News February 16, 2026
தருமபுரி: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

தருமபுரி மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு<
News February 16, 2026
அதிமுக மாவட்ட இணை செயலாளர் அறிவிப்பு

தருமபுரி மாவட்ட அதிமுக இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை இணை செயலாளராக வசந்த் நியமனம் செய்யப்படுவதாக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். காரிமங்கலம் ராமசாமி கோயிலை சேர்ந்த வசந்த், சில நாட்களுக்கு முன் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


