News May 10, 2024

திருச்சியில் 31 பேரை தட்டி தூக்கிய போலீசார்.!

image

திருச்சிக்கு சென்னையிலிருந்து நேற்று வந்த பஸ்ஸில் 14 கிலோ கஞ்சா கடத்தி வந்த 17 வயது சிறுவன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இன்று ஸ்ரீரங்கம், கோட்டை, காந்தி மார்க்கெட், பாலக்கரை, தில்லை நகர், உறையூர், அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் லாட்டரி சீட்டுகள் விற்றதாக 29 நபர்களை கைது செய்தனர். மொத்தம் திருச்சியில் 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Similar News

News July 6, 2025

திருச்சி: கழிவறை கட்ட ரூ.12,000 ஊக்கத் தொகை

image

தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), அனைத்து கிராமப் புற குடும்பங்களுக்கும் கழிவறை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தில் தகுதியுள்ள குடும்பங்களுக்கு தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டுவதற்கு ரூ.12,000 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற உங்கள் பகுதி ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News July 6, 2025

திருச்சி: விவசாயிகளுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம்

image

மத்திய அரசின் ‘கிசான் மந்தன் யோஜனா’ திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் விவசாயிகள் முதலீடு செய்தால் 60 வயதுக்கு பிறகு மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியம் கிடைக்கும். 2 ஏக்கருக்கும் குறைவான நிலம் உள்ள 18 – 40 வயதுடைய விவசாயிகள், உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த அற்புத தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

News July 6, 2025

திருச்சி ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

திருச்சி தெற்கு கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் குமார் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் விழுப்புரம்-ராமேஸ்வரம் இடையே வாரத்தின் இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் சேவை வருகிற ஜூலை 12-ந் தேதியில் இருந்து 27-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார்.

error: Content is protected !!