News February 13, 2026
கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (பிப்.12) இரவு முதல் இன்று (பிப்.13) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
Similar News
News February 19, 2026
கள்ளக்குறிச்சியில் பிணையமின்றி ரூ.40 லட்சம் கடனுதவி!

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., சொந்தமாக தொழில் தொடங்க ஆசையா..? கடன் வாங்க சொத்து ஏதும் இல்லையா..? கவலை வேண்டாம். அரசு சார்பாக உங்களுக்கு ரூ.40 லட்சம் வரை பிணையமின்றி கடன் வழங்கப்படுகிறது. இந்த TNCGS திட்டத்தில் இணைய, உங்கள் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி ( TAICO) , TAMCO, மாவட்ட தொழில் மையங்களில் விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News February 19, 2026
கள்ளக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அதிரடி மாற்றம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணியாற்றி வரும் 61 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் பொறியாளர்கள் துறையில் மேற் பார்வையாளர்களாக பணியாற்றி வரும் 23 பேரும் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.
News February 19, 2026
கள்ளக்குறிச்சியில் தூக்கிட்டு தற்கொலை!

தியாகதுருகம் அருகே பிரிதிவிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி மகன் செந்தில்(43). இவருக்கு கண்மணி என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். செந்தில், கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே நடந்த கருத்து வேறுபாட்டால், மனைவி பிரிந்து சென்றார். இந்த வேதனையில் செந்தில், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.


