News May 10, 2024
அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விவரம்

திருநெல்வேலி மாவட்டத்தில் 94 அரசு பள்ளியில் 2984 மாணவர்களும், 3886 மாணவிகளும் ஆக மொத்தம் 6870 பேர் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதியதில் மாணவர்கள் 2570 பேரும் மாணவிகள் 3666 பேரும் என மொத்தம் 6236 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி 86.13 சதவீதமாகவும், மாணவிகளின் தேர்ச்சி 94.34 சதவீதமாகவும், அரசு பள்ளிகளின் தேர்ச்சி 90.77 சதவீதமாகவும் உள்ளது.
Similar News
News November 5, 2025
நெல்லை மாவட்ட கல்வி அலுவலர் இடமாற்றம்

நெல்லை மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் மாவட்ட கல்வி அலுவலராக பணியாற்றி வந்த சங்கீதா சின்னராணி பதவி உயர்வு பெற்று தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை அரசு முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் பிறப்பித்துள்ளார். இதுபோல் தமிழக முழுவதும் 26 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
News November 5, 2025
நெல்லை: தலைமை செயலகத்தில் வேலை..இன்றே கடைசி

தமிழ்நாடு தலைமை செயலகம் மற்றும் நிதி பிரிவில் காலியாக உள்ள உதவிப் பிரிவு அலுவலர், உதவியாளர் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்கு 32 காலிப்பணிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். ஆர்வமுள்ளவர்கள் <
News November 5, 2025
நெல்லை: முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை

களக்காடு கோவில்பத்து பகுதியைச் சேர்ந்த கணவரை இழந்த தமிழ்ச்செல்வி என்ற பெண்ணை கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கடன் கொடுக்கல் வாங்கல் சம்பவத்தில் வழிமறித்து தவசிக்கனி என்பவர் அறிவாளால் வெட்டியுள்ளார். இது குறித்து களக்காடு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். நாங்குநேரி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட தவசிக்கனிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.


