News May 10, 2024
497 மதிப்பெண்கள் எடுத்த கூலித் தொழிலாளியின் மகள்

10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில், 497 மதிப்பெண்கள் எடுத்து கூலித் தொழிலாளியின் மகள் சாதித்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த ஜே.சுஸ்யா, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 3 பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்களும், தமிழில்-98, ஆங்கிலத்தில்-99 என எடுத்து அசத்தியுள்ளார். அவருக்கு ஆசிரியர்கள மற்றும் சக மாணவிகள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News November 18, 2025
ரஜினிக்கு பாராட்டு விழா நடத்தும் மத்திய அரசு

கோவாவில் வரும் 20 முதல் 28-ம் தேதி வரை, சர்வதேச திரைப்பட விழா நடைபெற உள்ளது. அதில், திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த், தெலுங்கு நடிகர் பாலய்யாவை கவுரவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த பாராட்டுவிழா, வரும் 28-ம் தேதி நடைபெற உள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். முன்னதாக, பாராட்டு விழா நடத்த சிலர் முன் வந்த போது, ரஜினி அதை தவிர்த்துவிட்டார்.
News November 18, 2025
ரஜினிக்கு பாராட்டு விழா நடத்தும் மத்திய அரசு

கோவாவில் வரும் 20 முதல் 28-ம் தேதி வரை, சர்வதேச திரைப்பட விழா நடைபெற உள்ளது. அதில், திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த், தெலுங்கு நடிகர் பாலய்யாவை கவுரவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த பாராட்டுவிழா, வரும் 28-ம் தேதி நடைபெற உள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். முன்னதாக, பாராட்டு விழா நடத்த சிலர் முன் வந்த போது, ரஜினி அதை தவிர்த்துவிட்டார்.
News November 18, 2025
நானும் ரவுடிதான் என்கிறார் விஜய்: சேகர் பாபு

விஜய் SIR பற்றி பேசுவது கடைசியாக நானும் ரவுடிதான் என சொல்வது போல இருக்கிறது என சேகர் பாபு விமர்சித்துள்ளார். முன்னதாக SIR-க்கு எதிராக திமுக நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தை விஜய் புறக்கணித்தார். அரசியல் நோக்கத்தோடு திமுக அந்த கூட்டத்தை நடத்துவதாக அறிக்கையில் விமர்சித்திருந்தார். இதனால் களத்தில் நின்று கருத்து சொல்லவில்லை, விஜய் பாஜகவின் பி டீம் என விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.


