News February 12, 2026

விருதுநகர் மாவட்டத்தில் அழகு கலை பயிற்சி – கலெக்டர் அறிவிப்பு

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இனைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு ஒப்பனை மற்றும் அழகுக்கலை பயிற்சிகளை வழங்குகிறது. இப்பயிற்சிற்கு ஆதிதிராவிடர் பழங்குடியினர் பிரிவை சேர்ந்த 18-35 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி முடிந்ததும் தகுதியானவர்களுக்கு மாதம் ரூ.20000 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும்.

Similar News

News February 17, 2026

விருதுநகர்: இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்.!

image

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <>eservices.t police.gov.in <<>>என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News February 17, 2026

விருதுநகர்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சோகம்.!

image

விருதுநகர், தும்முசின்னம்பட்டியை சேர்ந்தவர் சோலையன். இவர் மனைவி விஜயலட்சுமி மற்றும் மகன் சோலை செல்வம் ஆகியோருடன் காரில் குல தெய்வ கோவிலுக்கு சென்று விட்டு, அருப்புக்கோட்டை – சாயல்குடி சாலையில் வந்த போது, டூவீலர் மீது மோதாமலிருக்க காரை திருப்பிய போது, எதிரே வந்த கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் தந்தை மற்றும் மகன் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விஜயலட்சுமி மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார்.

News February 17, 2026

விருதுநகர்: பாம்பு கடித்து ஒருவர் பரிதாப பலி.!

image

செண்பகத்தோப்பு பகவதி நகர் பழங்குடியினர் குடியிருப்பை சேர்ந்தவர் முத்தையா (59). இவரது மனைவி சின்னத்தாய் (50). இருவரும் செண்பகத்தோப்பு சூழல் மேம்பாட்டு குழுவில் வேலை செய்து வருகின்றனர். நேற்று மாலை மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் வீடு திரும்பாததால், முத்தையா தேடிச் சென்ற நிலையில், ஓடை பகுதியில் மலைப்பாம்பு கடித்து (சுற்றியதில்) உயிரிழந்து கிடந்துள்ளார். இது குறித்து மம்சாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!