News February 12, 2026
காஞ்சிபுரத்தில் பெண் துடிதுடித்து பலி!

காவனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராதா(34). இவர், நேற்று(பிப்.11) காவனூரில் மொபட்டில் பொத்தேரி நோக்கி சென்று கொண்டிருந்தார். பொத்தேரி ரயில் நிலையம் அருகே சாலையைக் கடக்க ஓரமாக நின்றார். இந்நிலையில், அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து சரக்கு அட்டோ மீது மோதியது, அந்த சரக்கு ஆட்டோ, அருகே இருந்த மொபட்டில் மோதியது. இதில் படுகாயமடைந்த ராதா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Similar News
News February 18, 2026
காஞ்சிபுரத்தில் EB பில் எகிறுதா..?

காஞ்சிபுரம் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <
News February 18, 2026
காஞ்சிபுரத்தில் மின்சாரப் பிரச்னையா..?

காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டத்தில் காஞ்சிபுரம் வடக்கு, தெற்கு, ஸ்ரீபெரும்புதூர் மின் கோட்டங்கள் செயல்படுகின்றன. இந்நிலையில், நாளை(பிப்.19) காஞ்சிபுரம் வடக்கு கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், ரயில்வே சாலையில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் காலை 11:00 மணிக்கு நடைபெறுகிறது. இதில், உங்களது மின்சாரம் சார்ந்த எந்த வித குறைகளையும் தெரிவிக்கலாம். உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 18, 2026
காஞ்சிபுரம் கலெக்டர் உத்தரவிட்டார்!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. காஞ்சி, உத்திரமேரூர், ஆலந்தூர் மற்றும் திருப்பெரும்புதூர் ஆகிய தொகுதிகளில் உள்ள பதற்றமான மற்றும் பிரச்சனைக்குரிய வாக்குச்சாவடிகள் குறித்து இதில் ஆய்வு செய்யப்பட்டது. அங்கு கூடுதல் பாதுகாப்பு, கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து, தேர்தலை அமைதியாக நடத்த அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.


