News May 10, 2024

சென்னை: ரிசல்ட் பார்க்க சென்ற மாணவர் மரணம்

image

சென்னை, மதுரவாயல் தனலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் ஜீவா. 10 ஆம் வகுப்பு மாணவரான இவர் மதுரவாயில் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். தேர்வு முடிவுகளை காண்பதற்காக இன்று(மே 10) காலை புறப்பட்ட ஜீவா, மதுரவாயல் பாலத்தின் கீழே பைக்கில் சென்றபோது பின்னால் வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஓட்டுநர் தப்பிச்சென்ற நிலையில், லாரியை பறிமுதல் செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News April 21, 2025

சென்னையில் வாட்டி வதைக்கும் வெயில்

image

சென்னையில், வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதில் இருந்து தற்காத்துக் கொள்ள போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின்போது குடிநீர் எடுத்துச் செல்லுங்கள். ORS, எலுமிச்சை சாறு, இளநீர், மோர் போன்றவற்றை குடிக்கலாம். மென்மையான பருத்தி ஆடைகளை அணியுங்கள். வெளியே செல்லும்போது காலணி, தொப்பி அணிந்து, குடை பிடித்து செல்லுங்கள். மதிய நேர வெயிலில் செல்வதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

News April 21, 2025

ஓட்டுநர், நடத்துநர் பணி: இன்றே கடைசி நாள்

image

போக்குவரத்து கழகத்தில் 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் உள்ளன. 24 – 40 வயதுடையவராக இருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 18 மாதங்கள் கனரக வாகனம் ஒட்டியதற்கான அனுபவம் வேண்டும். எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் உண்டு. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால், உடனே இந்த <>லிங்கை <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும். ஷேர் பண்ணுங்க

News April 21, 2025

மாணவிக்கு கருக்கலைப்பு: பேராசிரியர் கைது

image

வண்டலூர் அருகே இயங்கி வரும் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைகழக மாணவியை கர்ப்பமாக்கி, கருக்கலைப்பு செய்த உதவி பேராசிரியர் ராஜேஷ்குமாரை (45) போலீசார் கைது செய்தனர். இவருக்கு கடந்த மாதம்தான் திருமணம் நடைபெற்றது. கருக்கலைப்பின்போது மாணவிக்கு ரத்தப்போக்கு அதிகமானதால், உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!