News May 10, 2024
கன்னியாகுமரி 3ஆவது இடம்!

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று(மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 95.17% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 92.74 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 97.66 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் அதிக தேர்ச்சி பெற்று கன்னியாகுமரி மாவட்டம் 3ஆம் இடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 19, 2025
கண்டித்த சூப்பர்வைசரை பிளேடால் வெட்டிய ஊழியர்

எறும்புக்கோட்டையைச் சேர்ந்த அபுதாகிர்(42), வலை கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இவரது கம்பெனியில் அமரேஷ்வர் சுவைன் வேலை பார்த்து வந்த நிலையில், அவர் படம் பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதை அபுதாகிர் கண்டித்ததால், அபுதாகிரை, அமரேஷ்வர் பிளேடால் வெட்டி, கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரின்பேரில், ராஜாக்கமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News April 19, 2025
நாகர்கோவிலின் அடையாளம் நாகராஜா கோயில்

இந்தியாவிலேயே மூலவர் நாகராஜா சிலை உள்ளது இங்கு மட்டும் தான். கருவறையில் நாகராஜா இருக்கும் இடத்தில் நீர் ஊறிக்கொண்டே இருக்கிறது. இந்த நீருடன் சேர்ந்த மணல் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த மணல் ஆடி – மார்கழி மாதம் வரை கருப்பு நிறத்திலும், தை – ஆனி மாதம் வரை வெள்ளை நிறத்திலும் மாறுவது அதிசயத்தக்க ஒன்றாகும். நாகதோஷம் நீங்க இங்கு பக்தர்கள் வருவது வழக்கம் *ஷேர் பண்ணுங்க
News April 19, 2025
நாகர்கோவிலில் 4,024 போக்குவரத்து விதிமுறை மீறல் வழக்கு

நாகர்கோவில் மாநகரப் பகுதியில் போக்குவரத்து ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் போலீசார் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 17 நாட்களில் மட்டும் நாகர்கோவில் மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 4,024 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் மது போதையில் வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், சாகசத்தில் ஈடுபடுதல் இந்த வழக்குகள் அதிகமாகும்.