News February 11, 2026
ஶ்ரீரங்கம்: மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

திருச்சி, ஸ்ரீரங்கம் மேலூரில் உள்ள காடை பிள்ளை அய்யனார் கோவில் திருவிழாவின்போது, கோவில் தேர் பட்டியலின மக்கள் வாழும் தெருக்களுக்கு வருவதில்லை, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென, திருச்சியை சேர்ந்த சத்யராஜ் என்பவர் ஹைகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக திருச்சி ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
Similar News
News February 12, 2026
திருச்சி – மயிலாடுதுறை பயணிகள் ரயில் ரத்து

திருச்சி – மயிலாடுதுறை பயணிகள் ரயில், பொறியியல் பணிகள் காரணமாக 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி – மயிலாடுதுறை பயணிகள் ரயிலானது வரும் 13, 16, 18 ஆகிய தேதிகளில், கும்பகோணம் – மயிலாடுதுறை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சியில் இருந்து கும்பகோணம் வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 12, 2026
திருச்சி: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <
News February 12, 2026
திருச்சி: டிகிரி போதும் – வேலை ரெடி

இந்தியக் கடற்படையில் 260 (SSC) அதிகாரி பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 260
3. சம்பளம்: ரூ1,25,000
4. கல்வித் தகுதி: B.Sc, B.Com, B.E/B.Tech, MCA, MBA
5. கடைசி தேதி: 24.02.2026
6. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


