News February 11, 2026

திருத்தணி: ஒன்றிய அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை

image

திருவள்ளூர்: திருத்தணி ஒன்றியம், பட்டாபிராமபுரம், வெங்கடாபுரம் கிராமத்தைச் சோ்ந்த, பெண்கள் நேற்று(பிப்.10) திருத்தணி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகையிட்டு, ஒன்றிய அலுவலா்களிடம் 100 நாள் வேலை வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக புகாா் தெரிவித்தனா். அப்போது ஒன்றிய அதிகாரிகள் பெண்களிடம் சமரசம் பேச்சு நடத்தி ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதை தொடா்ந்து, பெண்கள் கலைந்து சென்றனா்.

Similar News

News February 12, 2026

திருவள்ளூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக இளைஞர்களுக்கு தாட்கோ மூலம் Al, Food & Beverage, Apparel Designing, Cosmetology உள்ளிட்ட துறைகளில் இலவச திறன் பயிற்சி மூன்று மாதங்கள் வழங்கப்படுகிறது. 18-40 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என திருவள்ளூர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News February 12, 2026

திருவள்ளூர் கலெக்டர் அறிவித்தார்!

image

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2025-26 கூடுதல் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. உத்தேச ஒதுக்கீடு , திட்ட செயலாக்கத்தின்படி ஊராட்சி அளவிலான குழுவின் மூலம் தகுதி வாய்ந்த பயனாளிகளை தேர்வு செய்து, தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் பெயர் பட்டியலை ஒப்புதல் பெறும் பொருட்டு திருவள்ளூர் மாவட்ட கிராம ஊராட்சிகளில் வரும் 17ஆம்தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News February 12, 2026

திருவள்ளூரில் ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

திருவள்ளூர் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது <>pmjay.gov.in<<>> இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 3) விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். இதை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!