News February 11, 2026
செல்வப்பெருந்தகைக்கு அந்த தகுதி கிடையாது: வன்னி அரசு

விசிக, காங்., இடையிலான மோதல் நீண்டுகொண்டே செய்கிறது. காங்., கட்சிக்குள் இருக்கும் குளறுபடிகள், முரண்பாடுகள், கோஷ்டி பூசலை முதலில் செல்வப்பெருந்தகை சரிசெய்ய வேண்டும் என்று வன்னி அரசு பதிலடி கொடுத்துள்ளார். செல்வப்பெருந்தகையின் பேச்சில் நல்ல நோக்கம் இல்லை, அவருக்கு ஏன் இந்த மீடியேட்டர் வேலை கேள்வி எழுப்பினார். மேலும், திருமாவுக்கு ஆலோசனை சொல்லும் அளவுக்கு இன்னும் செல்வப்பெருந்தகை வளரவில்லை என்றார்.
Similar News
News February 18, 2026
கிரிக்கெட்டை மீட்டெடுக்க காதலியே காரணம்: ஹர்திக்

நடாஷா ஸ்டான்கோவிக் உடனான திருமண உறவை முறித்துக்கொண்ட ஹர்திக், இப்போது இந்திய மாடலான மஹிகா சர்மாவுடன் காதலில் இருக்கிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது காதலியை அவர் புகழ்ந்து தள்ளியுள்ளார். தன் கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் உற்சாகத்துடன் விளையாட முக்கிய காரணம் மஹிகா சர்மா தான் என கூறியுள்ளார். தனது காதலை வெளிப்படுத்தும் வகையில் காதலியின் பெயரின் முதல் எழுத்தான M-ஐ ஹர்திக் பச்சை குத்தியுள்ளார்.
News February 18, 2026
வங்கதேசத்தின் புதிய பிரதமரை இந்தியாவுக்கு அழைத்த மோடி

டாக்காவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் வங்கதேசத்தின் புதிய PM-ஆக தாரிக் ரஹ்மான் பதவியேற்றார். நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் பங்கேற்ற லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, தாரிக் ரஹ்மானிடம் PM மோடியின் வாழ்த்து கடிதத்தை கொடுத்தார். அதில் வங்கதேச PM-ஐ குடும்பத்துடன் இந்தியா வர மோடி அழைப்பு விடுத்திருந்தார். மேலும் இரு நாடுகளும் அமைதி, செழுமையை நோக்கி இணைந்து செயல்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
News February 18, 2026
அஜித் பவார் மரணம்… CBI விசாரணை கேட்கும் மனைவி

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவாரின் மரணத்தில் சதி இருக்கலாம் என காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சந்தேகித்தனர். மேலும் விசாரணை மந்தமாக நடப்பதாக அவரின் மருமகன் ரோஹித் பவாரும் குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில்
அஜித் பவாரின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என அவரது மனைவி DCM சுனேத்ரா பவார் மற்றும் NCP தலைவர்கள், CM தேவேந்திர பட்னாவிஸிடம் கோரிக்கை அளித்துள்ளனர்.


