News February 11, 2026
செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (பிப்.10) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News February 13, 2026
செங்கல்பட்டு: 7 வயது சிறுமிக்கு கொடுமை; பாய்ந்தது POCSO!

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே வசித்து வந்தவர் அன்பரசு (32), பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவர் 7 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை அலுத்துக்கொண்ட பெற்றோரிடம் கூறியுள்ளார். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வண்டலூர் அனைத்து மகளிர் போலீசார் அன்பரசுவை போக்சோவில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
News February 13, 2026
ஸ்தம்பித்த மதுராந்தகம்!

மதுராந்தகத்தில் இயந்திர கோளாறு காரணமாக பழுதாகி நின்ற கல்குவாரி லாரியால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. ஜல்லி மற்றும் எம் ஸ்டாண்ட் கலந்த கலவையை ஏற்றுக்கொண்டு லாரி ஒன்று மதுராந்தகம் நோக்கி வந்தது. அப்போது சென்னை மார்க்கத்தில் உள்ள மதுராந்தகம் பயணியர் நிழற்குடை அருகே இயந்திர கோளாறு காரணமாக லாரி நடுவழியில் நிறுத்தப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் போக்குவரத்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
News February 13, 2026
செங்கல்பட்டு: கல்லூரி விடுதியில் சடலமாக தொங்கிய மாணவன்!

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ஆயிஷ் மிஸ்ரா (18), இவர் செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலைக்கழக விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு பி.டெக்., படித்து வந்தார். இந்நிலையில் அவர் கல்லூரி விடுதியில் தூக்கிட்டு சடலமாக கிடந்துள்ளார். தகவலறிந்த போலீசார் உடலை கைப்பற்றி கல்லூரி நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


