News February 10, 2026
AI குறித்து விழிப்புணர்வு ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு!

தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலக தேசிய தகவலியல் மையத்தில், இணைய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு AI-யின் பாதுகாப்பான மற்றும் பொறுப்பான பயன்பாட்டிற்கான விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி இன்று (பிப்.10) நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் நேர்முக உதவியாளர் தவச்செல்வம் உள்ளிட்டோர் உறுதிமொழி ஏற்றனர்.
Similar News
News February 12, 2026
தஞ்சை: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.
News February 12, 2026
தஞ்சை – காரைக்கால் புதிய ரயில் பாதை திட்டம்

தஞ்சை – திருவாரூர் – காரைக்கால் புதிய ரயில் பாதை திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாராகிவிட்டதை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் இன்று உறுதி செய்துள்ளார். டெல்டா மாவட்டங்களின் வணிகம், சரக்கு போக்குவரத்து மற்றும் ஆன்மீகச் சுற்றுலாவை மேம்படுத்த இத்திட்டம் பெரிதும் உதவும். விரைவில் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் விரைவாகத் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News February 12, 2026
தஞ்சை – காரைக்கால் புதிய ரயில் பாதை திட்டம்

தஞ்சை – திருவாரூர் – காரைக்கால் புதிய ரயில் பாதை திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாராகிவிட்டதை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் இன்று உறுதி செய்துள்ளார். டெல்டா மாவட்டங்களின் வணிகம், சரக்கு போக்குவரத்து மற்றும் ஆன்மீகச் சுற்றுலாவை மேம்படுத்த இத்திட்டம் பெரிதும் உதவும். விரைவில் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் விரைவாகத் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


