News May 10, 2024
10ஆம் வகுப்பு தேர்ச்சியில் கடைசி இடம் பெற்ற மாவட்டம்

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில், வேலூர் மாவட்டம் 82.07% தேர்ச்சியுடன் மாநிலத்திலேயே கடைசி இடத்தில் உள்ளது. இங்கு 18,357 பேர் தேர்வெழுதிய நிலையில், 15,066 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 9,104 பேரும், மாணவிகள் 9,253 பேரும் தேர்வெழுதிய நிலையில், 6,885 மாணவர்களும் (75.63%), 8,181 மாணவிகளும் (88.41%) தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Similar News
News November 18, 2025
BREAKING: நாளை மறுநாள் அனைத்து பள்ளிகளுக்கும்…

அரசு தேர்வுகள் இயக்ககம் அனைத்து பள்ளிகளுக்கும் முக்கிய அறிவிப்பை வழங்கியுள்ளது. அதன்படி, நவ.10-ல் திறனறி தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் பெயர், இனிஷியல், படிக்கும் பள்ளி உள்ளிட்ட விவரங்களில் திருத்தம் இருப்பின், dgedsection@gmail.com இமெயில் மூலம் நவ.20-க்குள் தெரிவிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், தேர்வாகும் மாணவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு அரசு மாதந்தோறும் தலா ₹1,500 வழங்க உள்ளது. SHARE IT.
News November 18, 2025
அட்ஜஸ்ட்மெண்ட் குற்றச்சாட்டை மறுத்த தனுஷ் தரப்பு

தனுஷுடன் நடிக்க அட்ஜஸ்ட்மெண்ட் செய்யுமாறு அழுத்தம் தரப்பட்டதாக <<18320110>>நடிகை மான்யா<<>> வைத்த குற்றச்சாட்டை Wunderbar பிலிம்ஸ் மறுத்துள்ளது. இந்த விஷயத்தில் தங்களது பெயரை யாரோ தவறாக பயன்படுத்துவதாக Wunderbar பிலிம்ஸ் மற்றும் தனுஷின் மேலாளர் ஸ்ரேயாஸ் விளக்கமளித்துள்ளார். அந்நிறுவனத்தின் பெயரில் வரும் Casting Call அழைப்புகள் போலியானது என்றும், 7598756841 மொபைல் எண் தன்னுடையது அல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.
News November 18, 2025
உங்கள் போன், உங்களை ஒட்டுக் கேட்பது தெரியுமா?

நீங்கள் எதைப் பற்றியாவது பேசியபின், உங்கள் சோஷியல் மீடியா, இணைய தேடல்களில் அது தொடர்பான விளம்பரங்கள் வருவதை கவனித்திருக்கிறீர்களா? இதற்கு காரணம், நீங்கள் பேசுவதை போன் ஒட்டுக் கேட்பது தான் என்கின்றனர் டெக் நிபுணர்கள். உங்கள் பேச்சை கேட்கும் ஆப்கள், அதிலுள்ள Keywords-ஐ உள்வாங்கி, அதற்கேற்ப விளம்பரங்களை வழங்குகிறதாம். இதை தவிர்க்க, போனில் உள்ள ஆப்களில் மைக் பர்மிஷனை Turn off செய்ய வேண்டும்.


