News February 10, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.9) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணியில் காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்தில் உட்கோட்ட போலீஸ் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி என்னும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!
Similar News
News February 19, 2026
ஆன்லைனில் வேலைவாய்ப்பு.. நம்ப வேண்டாம்

திருப்பத்தூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தனது சமூக வலைத்தளம் பக்கத்தில் விழிப்புணர்வு பதிவை வெளியிட்டுள்ளது. அதில், டெலிகிராமில் வரும் போலியான வேலைவாய்ப்பை நம்பி பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம். அப்படி ஏமாந்தால் 1930 என்ற நம்பருக்கு கால் பண்ணலாம். ஒருவேளை நீங்கள் பாதிக்கப்பட்டால் https://cybercrime.gov.in/ என்ற தளத்தில் பதிவு செய்யலாம் என பதிவிட்டுள்ளார்.
News February 19, 2026
திருப்பத்தூர்: மெடிக்களில் மருந்து வாங்குறீங்களா?

சமீப காலங்களில் காலாவதியான மருந்துகள் & தவறான மருந்துகள் காரணமாக உயிரிழப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது. ஒருவேளை நீங்கள் பயன்படுத்திய மருந்தினால் ஆபத்து இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், தாமதிக்காமல் 1800-180-3024 என்ற எண்ணில் புகார் செய்யவும். இந்த புகாரின் மூலம், குறிப்பிட்ட மருந்து ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடு இருப்பின் அந்த மருந்து தடை செய்யப்படும். அல்லது அபராதம் விதிக்கப்படும். ஷேர்!
News February 19, 2026
திருப்பத்தூர்: தேர்வு முடிவுகள் வெளியீடு

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை (NMMS) தேர்வு எழுதிய எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று பிப்ரவரி 19, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியீடப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து தலைமை ஆசிரியர்களும், மாணவர்கள் தாங்கள் பெற்ற மதிப்பெண்களை தெரியப்படுத்த வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் புண்ணியகோடி தெரிவித்தார்.


