News February 10, 2026
தர்மபுரி : ரோந்து பணி காவலர்கள் விவரம்

தருமபுரி மாவட்டத்தில் இன்று (பிப்- 09) இரவு முதல் நாளை காலை (பிப்- 10) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
Similar News
News February 16, 2026
அதிமுக மாவட்ட இணை செயலாளர் அறிவிப்பு

தருமபுரி மாவட்ட அதிமுக இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை இணை செயலாளராக வசந்த் நியமனம் செய்யப்படுவதாக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். காரிமங்கலம் ராமசாமி கோயிலை சேர்ந்த வசந்த், சில நாட்களுக்கு முன் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
News February 16, 2026
தருமபுரியில் அரங்கேறிய கொடூரம்!

பிடமனேரி பகுதியை சேர்ந்த தம்பதி கோகுல் (31) அஞ்சுமாஸ்டெலஸ் (28). கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கோகுல் மனைவியை அடித்து துன்புறுத்தி வீட்டை விட்டு விரட்டியுள்ளார். பெற்றோர் வீட்டுக்கு சென்ற அஞ்சுமாஸ்டெலஸை உறவினர்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மீண்டும் தகராறு ஏற்படவே அஞ்சுமாஸ்டெலஸ் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். இதில் கோகுலை போலீசார் நேற்று கைது செய்தனர்.
News February 16, 2026
அறிவித்தார் தருமபுரி ஆட்சியர்!

தருமபுரி மாவட்ட பள்ளி கல்வித்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து நடத்தும் 18 வயதிற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நாளை (பிப்.17) நடைபெற உள்ளது. நல்லம்பள்ளி வட்டார வள மையத்தில் காலை 9:30 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த முகாம் நடைபெற உள்ளது. எனவே இந்த வாய்ப்பை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.


