News February 9, 2026

மருந்துத் துறை தேசிய குடற்புழு நீக்க நாள் அறிவிப்பு

image

தேசிய குடற்புழு நீக்க நாள் திட்டமானது ஆகஸ்ட் 2015 முதல் தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 6 மாதத்திற்கு ஒருமுறை பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் குடற்புழு நீக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த 2025- 2026 ஆம் வருடத்தின் இரண்டாம் சுற்று பிப்.10 ஆம் தேதி அன்றும் விடுபட்ட குழந்தைகளுக்கு பிப்.17 ஆம் தேதி அன்றும் தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் செலுத்தப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Similar News

News February 11, 2026

காஞ்சிபுரம்: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

image

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <>இங்கே<<>> கிளிக் செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க

News February 11, 2026

காஞ்சிபுரம்: +2 மாணவிக்கு பாலியல் தொல்லை!

image

சென்னை மேற்கு வேளச்சேரியைச் சேர்ந்தவர் ஆகாஷ்(25). இவர், ஆதம்பாக்கத்தில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.இவரது கடைக்கு வந்த +2 மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி, பலமுறை பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனை பெற்றோர் கண்டித்ததால் அவருடன் பழகுவதை மாணவி நிறுத்தியுள்ளார். இதற்கிடையில், ஒன்றாக இருந்த போது எடுத்த வீடியோவை இணையத்தில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். ஆகாஷை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.

News February 11, 2026

காஞ்சிபுரத்தில் அதிரடி கைது!

image

காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார். பரந்தூர் பசுமைவெளி விமான நிலைய திட்டத்திற்கு வழங்க இவரது நிலத்தை அளவீடு செய்து தர சர்வெயர் சுந்தர வடிவேலு(46) என்பவரை அணுகினார். அதற்கு சர்வேயர் ரூ.50 ஆயிரம் கேட்டுள்ளார். இதுகுறித்து ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீசாரிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ரசாயன பொடி தடவிய நோட்டுகளை வைத்து கையும் களவுமாக அவரை கைது செய்தனர்.

error: Content is protected !!