News May 10, 2024
ஆரஞ்சு கேப்பை கைப்பற்றிய விராட் கோலி

பஞ்சாப்பிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில், RCB வீரர் விராட் கோலி அதிரடி காட்டியுள்ளார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வந்த அவர், 7 Four, 6 Six என விளாசி தனது 55ஆவது ஐபிஎல் அரை சதத்தை பதிவு செய்தார். 92(47) ரன்கள் குவித்த நிலையில், அர்ஷ்தீப் சிங் வீசிய பந்தில் அவுட்டானார். இதனால் சதத்தை தவறவிட்டார். இருப்பினும், நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் (634) குவித்தவருக்கான ஆரஞ்சு கேப்பை கைப்பற்றினார்.
Similar News
News November 18, 2025
ஹமாஸ் பாணியில் டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டம்

டெல்லி குண்டு வெடிப்பு தொடர்பாக NIA நடத்தி வரும் தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. கார் வெடிப்பு தாக்குதலுக்கு முன்னதாக இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியது போல், டெல்லியில் டிரோன் தாக்குதலுக்கு தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்துள்ளன. NIA தற்கொலைப்படை தாக்குதலுக்கு உதவிய ஜாசிர் பிலால் வானியை கைது செய்துள்ளதால், விரைவில் மேலும் சிலர் பிடிபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
News November 18, 2025
ஹமாஸ் பாணியில் டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டம்

டெல்லி குண்டு வெடிப்பு தொடர்பாக NIA நடத்தி வரும் தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. கார் வெடிப்பு தாக்குதலுக்கு முன்னதாக இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியது போல், டெல்லியில் டிரோன் தாக்குதலுக்கு தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்துள்ளன. NIA தற்கொலைப்படை தாக்குதலுக்கு உதவிய ஜாசிர் பிலால் வானியை கைது செய்துள்ளதால், விரைவில் மேலும் சிலர் பிடிபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
News November 18, 2025
வரலாற்றில் இன்று

*1936 – விடுதலைப் போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனார் மறைந்த தினம்.
*1988 – அமெரிக்காவில் போதைப்பொருள் கடத்தலுக்கு மரணதண்டனை வழங்க ஒப்புதல்.
* 1963 – அழுத்தும் பட்டன்களை கொண்ட முதல் தொலைபேசி விற்பனைக்கு வந்தது.
*1984 – நடிகை நயன்தாரா பிறந்த தினம்.
* 2013 – நாசா மாவென் விண்கலத்தை செவ்வாய் நோக்கி ஏவியது.


