News February 9, 2026
இராமநாதபுரத்தில் உள்ள உலகின் முதல் கோவில்

உத்திரகோசமங்கை சிவன் கோயில்தான் உலகில் தோன்றிய முதல் சிவன் கோயில். ராமாயண காலத்திற்கு முன்பே இந்த கோவில் உள்ளது என தகவல். இதனை ‘மண் தோன்றியபோதே மங்கை தோன்றியது’ என்ற சொல் மொழியின் மூலமாக அறியலாம். உலகில் இங்குள்ள எந்த சிவன் கோயிலிலும் சிவனுக்கு தாழம்பூ வைத்து பூஜிக்கப்படுவதில்லை. இங்கு மட்டும் சிவனுக்கு தாழம்பூவைக் கொண்டு அர்ச்சனை நடக்கிறது. நடராஜர் திருமேனி மரகதத்தால் ஆனது இதன் தனி சிறப்பு.
Similar News
News February 13, 2026
பரமக்குடி: பெண்ணிடம் 8 சவரன் நகை பறிப்பு!

பரமக்குடி அருகே அரியனேந்தல் போக்குவரத்து நகரை சேர்ந்த ஜெயபாரதி ரியல் எஸ்டேட் புரோக்கராக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் முன் அறிமுகம் இல்லாத இருவர் 2 நாட்களாக நிலம் வாங்குவது குறித்து போனில் பேசி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று அவரது வீட்டிற்கு வந்து நிலம் வாங்குவது தொடர்பாக பேசி அவரை தாக்கி கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் தங்க நகை திருடியுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News February 13, 2026
ராமநாதபுரம்: உங்களுக்கு ரூ. 5000 வரலையா ? – Apply!

ராம்நாடு மக்களே, கலைஞர் உரிமை தொகை (பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் = ரூ.3000) + கோடை நிதி ரூ.2000 என மொத்தம் ரூ.5000 இன்று தமிழக அரசு வழங்கி உள்ளது. உங்களுக்கு ரூ. 5000 வரலையா? இங்கு <
News February 13, 2026
சிறுமிக்கு பாலியல் தொல்லை 20 ஆண்டு சிறை 5000 அவதாரம் விதிப்பு

திம்மநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிறுமிக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு அதே ஊரைச் சேர்ந்த செல்வ பெருமாள் பாலியல் தொல்லை அளித்ததாக வழக்கு கமுதி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸôர் விசாரித்து வந்தனர். இந்த வழக்கு மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற வந்தது. இந்நிலையில் பாலியல் தொல்லை அளித்த இளைஞர் செல்வபெருமாளுக்கு 20 வருடம் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கவிதா உத்தரவிட்டார்.


