News February 9, 2026

கும்மிடிப்பூண்டியில் ரயிலில் இருந்து குதித்து பலி!

image

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியில் இருந்து கடந்த பிப்.4ஆம் தேதி சென்ட்ரல் நோக்கி சென்ற மின்சார ரயிலில் சில வடமாநில இளைஞர்கள் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்துள்ளனர். அப்போது டிக்கெட் பரிசோதகர்கள் அவர்களை ஒன்று சேர்ந்து தாக்கியுள்ளார். இதனால் பயந்துபோன ஒரு இளைஞர் ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவர், நேற்று(பிப்.8) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Similar News

News February 12, 2026

திருத்தணியில் 9 மாத குழந்தை பரிதாப பலி!

image

மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சுனில் சலீம்(32). இவருக்கு, சீதா(27) என்ற மனைவியும், விதிசா என்ற 9 மாத குழந்தையும் உள்ளனர். கனகம்மாசத்திரத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று(பிப்.11) பசியால் அழுத குழந்தைக்கு, தாய் சீதா தாய்ப்பால் கொடுத்தார். அப்போது, குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தது. உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.

News February 12, 2026

திருவள்ளூரில் தலை நசுங்கி கொடூர பலி!

image

எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் ஊராட்சியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் முருகன்(69). இவரது மனைவி பெரியபாளையம் அரசுப் பள்ளி ஆசிரியையாக பணி புரிகிறார். இந்நிலையில், நேற்று(பிப்.11) தனது சைக்கிளில் பெரியபாளையம் அரசுப் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, மேம்பால சாலை வளைவில் திரும்பும் போது, அந்தப் பக்கம் வந்த லாரி மோதியதில், லாரியின் சக்கரத்தில் சிக்கி, தலை நசுங்கி உயிரிழந்தார்.

News February 12, 2026

கும்மிடிப்பூண்டியில் பெரும் துயர சம்பவம்!

image

கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் நூர். இவர், மாதச் சீட்டு நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், சீட்டு கட்டியவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க முடியாததால் நூர் தீக்குளிக்க முயன்றார். இதனைக் கண்ட அவரது மகன் அமானுல்லா தனது தாயை காப்பாற்ற முயன்றார். அப்போது இருவரும் பலத்த தீக்காயம் ஏற்பட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று அமானுல்லா உயிரிழந்தார்.

error: Content is protected !!