News February 9, 2026
கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (பிப்.8) இரவு முதல் இன்று (பிப்.9) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
Similar News
News February 14, 2026
கள்ளக்குறிச்சி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 14, 2026
கள்ளக்குறிச்சி: பேருந்து நிலையம் சென்றவருக்கு அதிர்ச்சி!

சோமண்டார்குடி கிராமத்தைச் சேர்ந்த வாசுதேவன் (58), கடந்த 5-ம் தேதி தனது பைக்கை பேருந்து நிலையத்தில் நிறுத்திவிட்டு வேப்பூர் சென்றுள்ளார். மதியம் திரும்பி வந்து பார்த்தபோது பைக் மாயமாகி இருந்தது. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
News February 14, 2026
கள்ளக்குறிச்சி: மர்மமுறையில் 10 சவரன் நகை திருட்டு!

சங்கராபுரம் குளத்துமேட்டு தெருவைச் சேர்ந்த செங்கல் சூளை உரிமையாளர் கபார்கான். இவரது மனைவி இலாள் (56). சம்பவத்தன்று இவரது வீட்டு பீரோவில் இருந்த 10 பவுன் நகை மர்மமான முறையில் காணாமல் போனது.
இதுகுறித்து இலாள் அளித்த புகாரின் பேரில், சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கள்ளச்சாவி மூலம் திருடப்பட்டதா எனப் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


