News May 10, 2024

பவள மாலை அலங்காரத்தில் நெல்லையப்பர்..!

image

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சுவாமி பவளமாலை அலங்காரத்தில் காட்சியளித்தார். நெல்லையப்பர் கோவில் வசந்த விழாவின் 16ம் நாள் நிகழ்ச்சியில் நேற்று (மே 9) இரவு சுவாமி காந்திமதி அம்பாளுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. அப்போது நெல்லையப்பர் பவள மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Similar News

News November 11, 2025

நெல்லையில் 6 இடங்களில் உச்சகட்ட பாதுகாப்பு

image

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக நெல்லை மாவட்டத்தில் கூடங்குளம் அணு மின் நிலையம், ஐ என் எஸ் கட்டபொம்மன், நெல்லையப்பர் கோவில் உள்ளிட்ட ஆறு முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்க டிஐஜி சந்தோஷ் ஹாதிமணி அறிவுறுத்தியுள்ளார். நெல்லை சரகத்திற்கு உட்பட்ட நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரவு ரோந்து பணியில் இருக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

News November 11, 2025

திருநெல்வேலி மாநகரத்தில் இரவு நேர ரூம் அதிகாரிகள் நியமிப்பு

image

திருநெல்வேலி மாநகர பகுதிகளில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டு வகையிலும் பாதுகாப்பு முன் ஏற்பாடுகளை மேற்கொள்ளும் வகையிலும் திருநெல்வேலி மாநகரத்தில் இரவு நேர ரோந்து அதிகாரிகளை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமணி நியமித்துள்ளார். திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை அதிகாரிகள் ரோந்து பணிகளையும் கண்காணிப்பு பணிகளையும் மேற்கொள்ளும் வகையில் அதிகாரிகளை நியமிக்கப்பட்டுள்ளனர்

News November 10, 2025

நெல்லையில் குடிநீர் கட்டண உயர்வு தீர்மானம் ஒத்திவைப்பு

image

திருநெல்வேலி மாநகராட்சியில் குடிநீர் கட்டணம் மூன்று மடங்கு உயர்த்தப்படுவதற்கான தீர்மானம் இன்றும் கொண்டுவரப்பட்டது. பொதுமக்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அந்த தீர்மானம் ஒத்தி வைக்கப்படுவதாக மேயர் ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார். குறிப்பாக அதிமுக சார்பில் மாநகராட்சியின் குடிநீர் கட்டண உயர்வு முடிவைக் கண்டித்து போஸ்டர் ஒட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!