News February 8, 2026

செங்கல்பட்டு: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

image

செங்கல்பட்டு மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள்(ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!

Similar News

News February 9, 2026

செங்கல்பட்டு: குளியலறையில் காத்திருந்த எமன்!

image

சோழிங்கநல்லூர் அண்ணா தெருவில் தனியார் ஹோட்டல் உள்ளது. இங்கு திருவண்ணாமலையை சேர்ந்த சங்கர் (27) என்பவர் தங்கி பணி புரிந்து வந்துள்ளார். நேற்று அறையில் உள்ள குளியலறைக்கு சென்று வாட்டர் ஹீட்டரை பயன்படுத்தி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். செம்மஞ்சேரி போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

News February 9, 2026

செங்கல்பட்டு அருகே தூக்கில் தொங்கிய கணவன்!

image

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் கண்ணதாசன் (34), இவர் குடும்பத்து டன் காட்டாங்கொளத்தூரில் தங்கி தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கண்ணதாசன் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது மனைவி திட்டி தீர்த்துள்ளார். மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News February 9, 2026

செங்கல்பட்டு: தறிகெட்டு ஓடிய பைக்; துடிதுடித்து பலி!

image

சோழிங்கநல்லூர் வில்லேஜ் சாலையை சேர்ந்தவர் டில்லி பாபு (24). இவர் நேற்று காலை பைக்கில் கோவளத்தில் இருந்து சோழிங்கநல்லூர் நோக்கி தாறு மாறாக சென்றதாக கூறப்படுகிறது. அப்போது முட்டுக்காடு பகுதியை கடந்து சென்ற போது பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சறுக்கி விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த டில்லி பாபு துடிதுடித்து உயிரிழந்தார். பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!