News February 8, 2026
தூத்துக்குடியில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 19 ஆண்கள், 3 பெண்கள், 5 மீனவ இளைஞர்கள் என மொத்தம் 27 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10-ம் வகுப்பு படித்த 18 முதல் 45 வயது உடையவர்கள் வரும் 12-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை தூத்துக்குடியில் உள்ள ஆயுதப்படை அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது
Similar News
News February 12, 2026
சமூகவலைதளத்தில் தூத்துக்குடி எம்.பி இரங்கல்

தமிழ்நாடு நாட்டுப்படகு மீனவர் சங்கத்தின் தலைவரும், உடன்குடி கிழக்கு ஒன்றியம் தி.மு.க மாவட்ட பிரதிநிதி திரு. ஜெயபிரகாஷ் அவர்களின் தந்தையாருமான திரு. எஸ்.ஜே.கயாஸ் அவர்கள் உடல்நலக் குறைவால் மறைந்த செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என தூத்துக்குடி மாவட்ட எம்.பி கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
News February 12, 2026
தமிழ்நாடு நாட்டுப்படகு சங்கத் தலைவர் காலமானார்

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட மனப்பாடு மீனவ கிராமத்தில் நாட்டுபடகு சங்கத் தலைவர் மற்றும் சமுதாய தலைவரான கயாஸ் இன்று இயற்கை எய்தினார். அவரது நல்லடக்கம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறும் என்று குடும்பத்தினர் தெரிவித்தனர். துக்கம் அனுசரிக்கும் விதமாக நாளை(பிப்.13) மீனவர் கிராமங்களில் யாரும் மிக பிடிக்கக் செல்ல மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News February 12, 2026
தூத்துக்குடி : வங்கி கணக்கில் அடிக்கடி Fine விழுகுதா?

தூத்துக்குடி மக்களே, உங்க வங்கியில் Minimum Balance இல்லைன்னு ரூ. 100,200 பணம் பிடிக்கீறார்களா? இதில் இருந்து தப்பிக்க வழி இருக்கு. இ<


