News February 8, 2026
அரியலூர்: குரூப்-2, 2 ஏ தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு!

அரியலூர் மாவட்டத்தில் குரூப்-2, 2 ஏ முதன்மை எழுத்து தேர்வுகள் இன்று காலை மற்றும் மதியம் ஆகிய இருவேளைகளில் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. தேர்வர்களுக்காக போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், தேர்வு எழுதுவோர் நேரத்திற்குள் வரவேண்டுமெனவும், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் எடுத்துவரக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!
Similar News
News February 9, 2026
அரியலூர்: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!
News February 9, 2026
வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கு மடிக்கணினி

தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தில் பணிபுரியும் வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கு, மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (பிப்.9) நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி கலந்து கொண்டு வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கு திட்டப்பணிகள் மேற்கொள்ள ஏதுவாக மடிகணினிகளை வழங்கினார். இதில் அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
News February 9, 2026
அரியலூரில் மாற்றுத்திறனாளிக்கு சக்கர நாற்காலி வழங்கிய ஆட்சியர்!

அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (பிப்.9) நடைபெற்றது. இதில் ஆட்சியர் ரத்தினசாமி கலந்து கொண்டு மாற்று திறனாளிக்கான பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட சக்கர நாற்காலியினை வழங்கினார். இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் கலந்து கொண்டார்.


