News February 8, 2026
நாகை: வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றிய பகுதிகளில் டிசம்பர் மாதம் பருவம் தவறி மழை பெய்த காரணத்தினால், தளாடி பயிர் சாகுபடி செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது. இதன்காரணமாக நடவு செய்து 50 நாட்களே ஆன நிலையில், இம்மாதம் இறுதி வரை மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டுமென தமிழக கடைமடை விவசாய சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உடனடியாக ஆற்றை தூர்வாரி தண்ணீர் திறக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.
Similar News
News February 17, 2026
திமுக சார்பில் சாதனை விளக்க கூட்டம்!

நாகை அவுரித் திடலில் திமுக சார்பில் தமிழ்நாடு தலைக்குனியாது என்கிற நாகை சட்டமன்ற தொகுதி சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது . இக்கூட்டத்தில் நாகை மாவட்ட திமுக செயலாளர் என். கௌதமன் தலைமை வகித்தார். திமுக செய்தி தொடர்பு செயலாளர் கான்ஸ்டனைன் ரவீந்திரன் கலந்து கொண்டு, சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில், நாகை மாவட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
News February 17, 2026
திமுக சார்பில் சாதனை விளக்க கூட்டம்!

நாகை அவுரித் திடலில் திமுக சார்பில் தமிழ்நாடு தலைக்குனியாது என்கிற நாகை சட்டமன்ற தொகுதி சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது . இக்கூட்டத்தில் நாகை மாவட்ட திமுக செயலாளர் என். கௌதமன் தலைமை வகித்தார். திமுக செய்தி தொடர்பு செயலாளர் கான்ஸ்டனைன் ரவீந்திரன் கலந்து கொண்டு, சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில், நாகை மாவட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
News February 17, 2026
நாகை: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!


