News February 8, 2026

செங்கல்பட்டு: கடையில் பற்றி எரிந்த தீ!

image

பழைய மாமல்லபுரம் சாலை திருப்போரூர் முருகன் கோவில் அருகே செந்தில் என்பவருக்கு சொந்தமான இடத்தில் ஒரு பழக்கடை மற்றும் மற்றொரு பகுதியில் ஒரு சிப்ஸ் கடை நடத்த தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், திடீரென பயங்கரமாக தீ பிடித்து எரிந்தது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர். இருப்பினும் ரூ.5 லட்சம் மதிப்பு உள்ள பொருட்கள் நாசமாகின.

Similar News

News February 15, 2026

செங்கல்பட்டு:மனைவியை அடித்துக் கொன்ற கணவர்!

image

தாம்பரம் அருகே பெருங்களத்தூரில் சாப்பாடு பரிமாற மறுத்த மனைவியை, கணவர் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணேசன் என்பவர் தனது மனைவி அமுதாவிடம் உணவு கேட்டபோது ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்து டேபிள் பேனால் அவரைத் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அமுதா உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கணேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 15, 2026

செங்கல்பட்டு: இளைஞர் உடல் சிதறி பலி!

image

காஞ்சிபுரம் அருகே மாடம்பாக்கம் சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 26) கூடுவாஞ்சேரி அருகே தண்டவாளத்தில் ரயில் மோதி உயிரிழந்துள்ளார். தகவலின் பெயரில் ரெயில்வே போலீசார் விரைந்து சென்று உயிரிழந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் ராமச்சந்திரன் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

News February 15, 2026

தாம்பரம் இன்று இரவு பணி காவலர் விவரம்

image

தாம்பரம் நேற்று(பிப்-14) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!