News May 9, 2024
PBKSvsRCB போட்டி நிறுத்தம்

நடைபெற்று வரும் பெங்களூரு, பஞ்சாப் இடையேயான ஐபிஎல் போட்டி மழையின் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் தரம்சாலாவில் நடைபெற்று வரும் போட்டியில் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. 8.25 மணிக்கு போட்டி நிறுத்தப்படும்போது பெங்களூரு அணி 10 ஓவர்களில் 119 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. ரஜத் பட்டிதார் 55 ரன்களும், கோலி 42 ரன்களும் எடுத்துள்ளனர்.
Similar News
News September 25, 2025
காலையில் எழுந்ததும் சிகரெட் பிடிப்பவரா நீங்கள்?

காலையில் எழுந்ததும் 30 நிமிடங்களுக்குள் சிகரெட் பிடிப்பவர்களுக்கு வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளதாக பென்சில்வேனியா மாகாண பல்கலை., ஆய்வில் தெரியவந்துள்ளது. சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் கேன்சர் மற்றும் உடலில் கெட்ட கொழுப்புகள், ரத்த கொதிப்பு, இதய நோய்கள், நீரிழிவு பிரச்னைகளை ஏற்படுத்தும். இது இளைஞர்களை அதிகம் பாதிக்கலாம் என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
News September 25, 2025
‘மெய்யழகன்’ படத்தை தமிழில் எடுத்தது தவறா?

‘மெய்யழகன்’படத்திற்கு என்று தனி ரசிகர் பட்டாளம் இருந்தாலும், படம் வெளியான சமயத்தில் பல எதிர்மறை விமர்சனங்களும் வந்தன. இந்நிலையில், ‘மெய்யழகன்’ படத்தை தமிழில் எடுத்தது தவறு என பலர் கூறியதாக இயக்குநர் பிரேம் குமார் கூறி இருக்கிறார். மெய்யழகனை மலையாளத்தில் எடுத்திருந்தால் தமிழ் ரசிகர்கள் அதை கொண்டாடி இருப்பார்கள் என தன்னிடம் சொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மெய்யழகன் படம் பிடிக்குமா?
News September 25, 2025
தமிழகத்தில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி

வடக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் இன்று ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. முக்கியமாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.