News February 7, 2026
சிறிய அணியிடம் போராடி வென்ற பாகிஸ்தான்!

டி2O WC-ன் முதல் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய நெதர்லாந்து 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து விளையாடிய பாக்., அணியில், ஃபர்ஹான்(47) மட்டுமே குறிப்பிடதக்க ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடைசி 2 ஓவர்களில் 29 ரன்கள் தேவை என்ற நிலையில், 19-வது ஓவரில் பஹீம் அஷ்ரஃப் 24 ரன்களை விளாசி ஆட்டத்தை பாக்., பக்கம் திருப்பினார்.
Similar News
News February 18, 2026
சென்னை: தகாத உறவை கண்டித்ததால் தற்கொலை!

புளியந்தோப்பு, வ.உ.சி நகரைச் சேர்ந்தவர் கோகுல் ஷியாம் (25). இவர் திருமணமான ஓர் பெண்ணுடன் தகாத உறவில் இருந்துள்ளார். கடந்த 7ஆம் தேதி அப்பெண்ணுடன் கோவளம் சென்றவர், பிப்.13ஆம் தேதி வரை விடுதியில் தங்கியுள்ளார். இதனை பெற்றோர் கண்டித்ததால் அப்பெண்ணை அங்கேயே விட்டு இவர் வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த ஷியாம், நேற்று(பிப்.17) வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
News February 18, 2026
ராவி நதி நீரை நிறுத்த திட்டம்.. பாகிஸ்தானுக்கு அடுத்த செக்!

ராவி நதியிலிருந்து பாக்., செல்லும் உபரி நீர் திறப்பை நிறுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. JK நீர்வளத்துறை அமைச்சர் ஜாவேத், ஷாபூர் கண்டி அணை கட்டி முடிக்கப்பட்டதும், ராவி நதியின் உபரிநீர் பாகிஸ்தானுக்கு செல்வது நிறுத்தப்படும் என்றார். ஏற்கெனவே பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. இதனால், பாக்.,கில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
News February 18, 2026
மத்திய – மாநில உறவு குறித்த அறிக்கை தாக்கல்

மத்திய – மாநில உறவு குறித்த உயர்நிலைக்குழுவின் அறிக்கையை சட்டமன்றத்தில் CM ஸ்டாலின் தாக்கல் செய்துள்ளார். மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி கொள்கையை வலியுறுத்தும் வகையில், Ex SC நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது என்றும், இந்தியாவில் மாநில சுயாட்சிக்கு பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியான TN, இந்த அறிக்கையின் மூலம் பூனைக்கு மணிகட்டியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.


