News February 7, 2026
ராணிப்பேட்டை: பயிற்சியை ஆய்வு செய்த கண்காணிப்பாளர்

இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வாராந்திர உடற்பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால், பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் உடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் (CWC), துணை காவல் கண்காணிப்பாளர் குமார் (DCRB), காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News February 9, 2026
ராணிப்பேட்டை வருகிறார் CM ஸ்டாலின்!

பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டையில் ரூ. 9,000 கோடியில் அமைக்கப்பட்டுள்ள டாடா மோட்டாா்ஸ் காா் உற்பத்தி தொழிற்சாலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று (பிப். 9) திறந்து வைக்க உள்ளாா். தொழிற்சாலையை திறந்து வைப்பதுடன், உற்பத்தி செய்யப்பட்டுள்ள முதல் வாகனத்தின் இயக்கத்தையும் இன்று கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளாா். இதையடுத்த பாதுகாப்பு பணிகளுக்காக 1,500 போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
News February 9, 2026
ராணிப்பேட்டையில் இன்று அதிரடி தடை!

ராணிப்பேட்டையில் இன்று (பிப். 9) ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. பனப்பாக்கம் அருகில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள டாடா மோட்டாா்ஸ் நிறுவனத்தின் திறப்பு விழாவுக்கு, இன்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ளாா். இதையடுத்து ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட காவல் துறை அறிவித்து உள்ளது.
News February 9, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (பிப்.8) இரவு முதல் இன்று (பிப்.9) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


