News February 7, 2026

ராசிபுரத்தில் வசமாக சிக்கிய நபர்!

image

ராசிபுரம் காவல் எல்லைக்குட்பட்ட அத்தனூர் அம்மன் கோவில் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின்படி, காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த மாரியப்பன் (40) என்பவரை பிடித்த போலீஸார், அவரிடமிருந்து 1.100 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ராசிபுரம் காவல்துறையினர், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News

News February 12, 2026

நாமக்கல்: கேன் தண்ணீர் வாங்குவோர் கவனத்திற்கு!

image

நாமக்கல் மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News February 12, 2026

நாமக்கல்: உங்கள் பகுதியில் ரோடு சரியில்லையா?

image

நாமக்கல் மக்களே, உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து <>“நம்ம சாலை” <<>>செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News February 12, 2026

நாமக்கல்: ரூ.1 லட்சம் சம்பளத்தில் வங்கி வேலை

image

பரோடா வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1) காலிப்பணியிடங்கள்-419
2) வயது வரம்பு- 22-40
3) சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,05,280.
4) கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5) கடைசி நாள்: 26.2.2026
6) விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>செய்யவும்.
வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!