News February 7, 2026

நெல்லையில் காவலரை தாக்கிய கைதி

image

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை மத்திய சிறையில் சிறைக் காவலராக பணி புரியும் சாம்பிரைட் என்பவரை தண்டனை கைதியான தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த கணபதி மகன் முத்துராமலிங்கம் (50) என்பவர் தாக்கி பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார். சிறை அதிகாரி முனியாண்டி கொடுத்த புகாரின் பேரில் பெருமாள்புரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

Similar News

News February 9, 2026

நெல்லை: கட்டாயம் உங்கள் போனில் இருக்க வேண்டிய எண்கள்!

image

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.

News February 9, 2026

திருநெல்வேலி: மர்மமான முறையில் ஒருவர் கொலை

image

நெல்லை மூன்றடைப்பு காவல் நிலைய சரகம் பாணாங்குளத்தில் நேற்று இரவு இசக்கி பாண்டி(48) என்ற நபர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். மூன்றடைப்பு காவல்துறையினர் சம்பவ இடம் சென்று இறப்பிற்கான காரணம் குறித்தும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் குறித்தும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மர்ம நபர்கள் அவரை கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

News February 9, 2026

திருநெல்வேலியில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு!

image

நெல்லை, பாளையங்கோட்டை ராஜா குடியிருப்பை சேர்ந்தவர் விக்னேஷ்வர் (29). இவரிடம் பாரத் (26) என்பவர் மது அருந்த பணம் கேட்டுள்ளார். விக்னேஷ்வர் பணம் தர மறுத்த காரணத்தால் அரிவாளால் தாக்கி கொலை செய்ய முயற்சித்ததாக விக்னேஷ்வர் கொடுத்த புகாரின் பேரில் பாளை போலீசார் பரத்தை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.

error: Content is protected !!