News February 6, 2026
தி.மலை: உயிரை கையில் பிடித்து வாழும் மக்கள்

ஆரணி அடுத்த தச்சூர் பகுதியில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் இருளர் இன குடும்பத்திற்கு சமத்துவபுரம் வீடு கட்டிக்கொடுக்கப்பட்டது. அந்த வீடுகள் அனைத்தும் தரமற்ற முறையில் இருப்பதாகவும், தொட்டாலே பெயர்ந்து விழுவதாகவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் தங்கள் உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லை எனவும், வீடு கட்ட ஒதுக்கிய நிதியை கொள்ளை அடித்தவர்கள் மீது நடக்கடிகை எடுக்க வேண்டும் எனவும் குமுறுகின்றனர்.
Similar News
News February 11, 2026
அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் 4 அம்ச கோரிக்கை களை நிறைவேற்ற கோரி திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நேற்று (பிப்.10) நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ண மூர்த்தி தலைமை தாங்கினார்.இதில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி பேசினார். இதில் அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
News February 11, 2026
அறிவித்தார் தி.மலை கலெக்டர்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்பட்டுவரும் 1,720 நியாயவிலைக் கடைகள் மூலம் 7.89 லட்சம் குடும்ப அட்டைதாரா்கள் பயன்பெற்று வருகின்றனா் என மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 6,60, 939 அரிசி குடும்ப அட்டைகள், 2,907 சா்க்கரை குடும்ப அட்டைகள், 76ஆயிரத்து 869 அரிசி குடும்ப அட்டைகள், 46ஆயிரத்து 640 முதியோா் உதவித்தொகை அரிசி பெறும் அட்டைகள், 475 அரிசி பெறும் அட்டைகள் ஆகும்.
News February 11, 2026
தி.மலையில் கூண்டோடு 500 பேர் கைது!

தி.மலை கலெக்டர் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை சங்க கூட்டமைப்பினர் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று(பிப்.10) போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்களிடம் பிடிட்தம் செய்யப்படும் 10% பங்களிப்பை ரத்து செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில், 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.


