News February 6, 2026
கிருஷ்ணகிரியில் தம்பியை குத்தி கொன்ற கொடூரம்!

கெலமங்கலத்தை சேர்ந்த சகோதரர்கள் சின்னசாமி (50), கோவிந்தசாமி (48), மாரியப்பன் (45) பழனி (40). சொத்தை பங்கு பிரிப்பதில் சகோதரர்கள் இடையே தகராறு இருந்து வந்தது. இதில் பிப்ரவரி 4-ம் தேதி மாலை தம்பிகள் 3 பேர் சின்னசாமியிடம் நிலப்பத்திரம் கேட்டு தகராறு செய்தனர். இதில் சின்னசாமியின் மகன் ராஜசேகர் (26) கத்தியால் கோவிந்தசாமியை குத்தி கொலை செய்தார். கெலமங்கலம் போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.
Similar News
News February 9, 2026
கிருஷ்ணகிரியில் EB பில் எகுறுதா..?

கிருஷ்ணகிரி மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..?<
News February 9, 2026
கிருஷ்ணகிரி: மிரண்டு வந்த மாடு; பறிபோன உயிர்!

ராயக்கோட்டையை சேர்ந்தவர்கள் சிவப்பிரகாஷ் (26), பிரியதர்ஷினி (18), மாற்றுத்திறனாளி. நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் உள்ள சந்தையில் சிவப்பிரகாஷ், பிரியதர்ஷினி ஆகியோர் நின்று கொண்டிருந்தனர். அப்போது செந்தில் (29) என்பவரது மாடு மிரண்டு ஓடி வந்து அவர்கள் மோதியது. இதில் படுகாயமடைந்த பிரியதர்ஷினி கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி நேற்று பிரியதர்ஷினி உயிரிழந்தார்.
News February 9, 2026
கிருஷ்ணகிரியில் மின் தடை; உங்க ஏரியா இருக்கா?

கிருஷ்ணகிரியில் மாவட்டத்துக்குட்பட்ட பென்னேஸ்வரம் மற்றும் பர்கூர் துணை மின் நிலையங்களில் இன்று (பிப்.9) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று (பிப்.9) காலை 9 முதல் 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி பார்கூர், சிப்காட், ஒப்பதவாடி, வரமலைகுண்டா, கரகுப்பம் மற்றும் காவேரிப்பட்டணம், தள்ளிஹல்லி, பென்னேஸ்வரம் மடம் சுற்று வட்டார பகுதிகளில் மின் தடை ஏற்படும். SHARE IT!


