News May 9, 2024
பிளஸ் டூ முடித்தவர்களுக்கு உயர்கல்வி நிகழ்ச்சி

தருமபுரி ஸ்ரீ விஜய் வித்யாலயா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலை அரங்கில் பிளஸ் டூ தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி கனவு என்ற வழிகாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் சாந்தி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு எந்தெந்த படிப்பு படிக்கலாம், எந்தப் படிப்புக்கு கல்லூரியில் அதிக இடங்கள் உள்ளது என்பது குறித்து வல்லுனர்கள் ஆலோசனை வழங்கினர்.
Similar News
News November 4, 2025
தருமபுரியில் தொழுநோய் கணக்கெடுப்பு பணி தீவிரம்

தருமபுரி மாவட்டத்தில் சுகாதார துறை சார்பாக தொழுநோய் கணக்கெடுப்பு முகாம் இன்று (நவ.04) நடைபெற்றுவருகிறது. தனியார் கல்லூரி மாணவர்கள், நகராட்சி உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று தொழுநோய்கான அறிகுறிகளை சோதனை செய்கின்றனர். மேலும் தொழுநோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் மருத்துவசிகிச்சை முறைகளையும் எடுத்துறைக்கின்றனர். இதில் சுகாதார துறை மற்றும் துறை சார்ந்த அலுவலகர்கள் ஈடுபடுகின்றனர்.
News November 4, 2025
தருமபுரி: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

தருமபுரி மாவட்ட மக்களே…, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இனி அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும். மேலும் இது தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 4, 2025
தருமபுரி: சார்பு நீதிமன்றத்தில் பரபரப்பு!!

தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டியில், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல், சார்பு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நீதிமன்றங்கள், 2008ல் தொடங்கி, 17 ஆண்டுகளாக தனியார் கட்டிடத்தில் எவ்வித வசதிகளுமின்றி செயல்பட்டு வருகிறது. வருவாய் துறை மூலம் இடம் தேர்வு செய்யப்பட்டும், இதுவரை கட்டிடம் கட்டாததால். அதனால் வக்கீல்கள் நேற்று(நவ.03) கோர்ட் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.


