News February 6, 2026
ராணிப்பேட்டை: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க காவல் துறையினர் இரவு நேர ரோந்து பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு, நேற்று இரவு – இன்று (5.2.26) காலை வரை ஒருங்கிணைந்த ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட உள்ளன. மேலும், குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் காவல்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ஷேர்!
Similar News
News February 13, 2026
ராணிப்பேட்டையில் கூண்டோடு கைது!

ராணிப்பேட்டையில் நாடு தழுவிய மறியல் போராட்டத்தின் எதிரொலியாய் நேற்று (பிப்.12) கலவை பஸ் நிலையத்தில் தமிழ்நாடு விவசாய சங்கம், அகில இந்திய விவசாய சங்கம் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் சார்பில் விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், மத்திய அரசின் விவசாய தொழிலாளர்கள் விரோத போக்கை கண்டித்தும் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 65 பேரை கலவை போலீசார் கைது செய்தனர்.
News February 13, 2026
ராணிப்பேட்டையில் பயங்கர தீ!

ஓச்சேரி -நெமிலி நெடுஞ்சாலையில் வேட்டாங்குளத்தில் பழைய இரும்பு குடோன் உள்ளது. நேற்று (பிப்.12) குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் தீயில் கருகின. இதனால் அப்பகுதியை கரும்புகை சூழ்ந்தது. அவ்வழியாக சென்ற வாகன ஒட்டிகள் கடும் அவதிப்பட்டனர். தகவல் அறிந்த அரக்கோணம் தீயணைப்பு நிலைய வீரர்கள் 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.
News February 13, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று) இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது


