News May 9, 2024
ஜெயக்குமார் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்?

காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவரது உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு 5 நாள்கள் ஆகியும், தனிப்படை போலீசாரின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. ஜெயக்குமாரின் மகன்கள் உள்பட பலரிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், சிபிசிஐடி அதிகாரி உடன் தனிப்படை போலீசார் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News November 17, 2025
ஞாபகம் வருதா.. தீப்பெட்டி ரயில்!

சிறுவயதில் விளையாடுவதற்கு பொம்மை வாங்க அப்பாவிடம் காசு இருக்காது. அதனால், நாமே சில பொம்மைகளை உருவாக்குவோம். அதில் ஒன்று தீப்பெட்டி ரயில். தீர்ந்து போன தீப்பெட்டிகளை பாடுபட்டு சேகரித்து, எல்லா பெட்டிகளையும் ஒன்றாக இணைத்து இந்த ரயிலை செய்வோம். ’கூ’ என்று சத்தம் போட்டுக்கொண்டே திண்ணையில் ரயில் ஓட்டியது மகிழ்ச்சியான அந்த காலம். உங்களுக்கு அந்த அனுபவம் இருக்கா?
News November 17, 2025
ஞாபகம் வருதா.. தீப்பெட்டி ரயில்!

சிறுவயதில் விளையாடுவதற்கு பொம்மை வாங்க அப்பாவிடம் காசு இருக்காது. அதனால், நாமே சில பொம்மைகளை உருவாக்குவோம். அதில் ஒன்று தீப்பெட்டி ரயில். தீர்ந்து போன தீப்பெட்டிகளை பாடுபட்டு சேகரித்து, எல்லா பெட்டிகளையும் ஒன்றாக இணைத்து இந்த ரயிலை செய்வோம். ’கூ’ என்று சத்தம் போட்டுக்கொண்டே திண்ணையில் ரயில் ஓட்டியது மகிழ்ச்சியான அந்த காலம். உங்களுக்கு அந்த அனுபவம் இருக்கா?
News November 17, 2025
விஜய்யுடன் கூட்டணியா? செங்கோட்டையன் பதில்

இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் குறித்து செங்கோட்டையனின் ரியாக்ஷன் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தலைமையிலான கூட்டணியில் இணைவீர்களா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். தனது பதிலால் கட்சிக்குள் புதிய சர்ச்சை எழுவதை தவிர்க்கவே அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். அதேநேரம், அதிமுக ஒருங்கிணைப்பு வெகு விரைவிலேயே நடக்கும் என்றார்.


