News February 5, 2026

என் ஊர் என் கனவு திட்டம் குறித்த கருத்து கேட்பு கூட்டம்

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் என் ஊர் என் கனவு திட்டம் குறித்த கருத்து கேட்பு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. திருவாரூர் ஆட்சியர் தெரு மோகனச்சந்திரன் தலைமையில் கூடுதல் ஆட்சியர் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் செல்வி பல்லவி உள்ளிட்டோர் முன்னிலையில் அரசு அலுவலர்கள் சுகாதாரத் துறையினர் கலந்துகொண்டு நடைபெற்றது.

Similar News

News February 12, 2026

திருவாரூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

image

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.

News February 12, 2026

திருவாரூர்: மளிகை கடைக்காரரிடம் ரூ.10 லட்சம் மோசடி

image

தண்டலை கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (40). இவர் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவரிடம் மர்மநபர் ஒருவர் ஆன்லைனில் பணம் முதலீடு செய்தால், பணம் இரட்டிப்பாகும் என கூறியுள்ளார். இதை நம்பிய கார்த்திகேயன், சிறுக சிறுக ரூ.10,37,571 பணம் அனுப்பியுள்ளார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கார்த்திகேயன் திருவாரூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News February 12, 2026

திருவாரூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில், “சமூக வலைத்தளங்கள் மூலம் பரிசுகள், சலுகைகள் என்று அரசின் பெயரிலோ, முன்பின் தெரியாத எண்களிலிருந்தோ link, APK போன்று வரும் குறுஞ்செய்தியை கிளிக் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.மேலும் இதன் மூலம் உங்கள் விபரங்கள் திருடப்படலாம் எனவும் மோசடியிலிருந்து பாதுகாப்பாக இருக்கவும்.” என திருவாரூர் மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.

error: Content is protected !!