News February 5, 2026
கடலூர் மாவட்டத்தில் குடிமை பணிகள் தேர்வு, ஆட்சியர் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வுகள், 08.02.2026 அன்று இருவேளைகளிலும்கடலூர், தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் நடைபெறவுள்ளது. ஹால் டிக்கெட் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 10, 2026
மோடி அரசின் துரோகத்தை வீழ்த்துவோம் – பண்ருட்டி MLA

‘பத்தாண்டுகாலக் கார்ப்பரேட் அடிமைத்தனம்., இந்தியாவின் வளங்களை அந்நிய நாடுகளுக்குத் தாரைவார்க்கும் மோடி அரசு! விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அமெரிக்காவிற்கு தாரைவார்க்காமல் மோடி அரசின் துரோகத்தை வீழ்த்துவோம்’ என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான தி. வேல்முருகன் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
News February 10, 2026
கடலூர்: போஸ்ட் ஆபீஸ் வேலை- தேர்வு கிடையாது!

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு: <
இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News February 10, 2026
கடலூர்: தகராறில் ஈடுபட்ட ரவுடி கைது

நெய்வேலி அடுத்த மேல் வடக்குத்து கிராமத்தை சேர்ந்தவர் நடேசன் மகன் வீரமணி(26). ரவுடியான இவர் மீது 20 வழக்குகள் உள்ளன. இந்நிலையில் நேற்று அவர் வடக்குத்தில் வீச்சரிவாளுடன் நின்று கொண்டு போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தினார். மேலும் அந்த வழியாக வந்த பொதுமக்களிடம் வீச்சரிவாளை காட்டி மிரட்டினார். இது குறித்த நெய்வேலி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரமணியை கைது செய்தனர்.


