News February 5, 2026

செங்கல்பட்டு: நடுவழியில் பற்றி எரிந்த கார்

image

சென்னை தி.நகர் பகுதியை சேர்ந்தவர் கோபி, இவர் நேற்று தனது மனைவியுடன் சென்னையில் இருந்து பொத்தேரி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். கூடுவாஞ்சேரி அடுத்த வல்லாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலையில் செல்லும்போது திடீரென காரின் முன் பக்கத்தில் இருந்து புகை வந்தது. சுதாரித்துக்கொண்ட கோபி காரை விட்டு இறங்கினார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும், கார் தீயில் எரிந்த நாசமானது.

Similar News

News February 10, 2026

செங்கல்பட்டு: தலைகுப்புற கவிழ்ந்த லாரி!

image

மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி கிழக்கு கடற்கரை சாலை யில் கட்டிட பணிக்காக எம் சாண்ட் ஏற்றிக்கொண்டு கனரக டிப்பர் லாரி ஒன்று அதிவேகமாக கல்பாக்கத்தில் இருந்து மாமல்லபுரம் நோக்கி கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது பாரம் தாங்காமல் டிப்பர் லாரியின் டயர் வெடித்ததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. ஓட்டுனர் அன்பரசன் நல்வாய்ப்பாக உயிர்தப்பினார்.

News February 10, 2026

பறந்தது செங்கல்பட்டு ஆட்சியரின் உத்தரவு

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் 323 மனுக்கள் பெறப்பட்டன. ஆட்சியர் தி. சினேகா தலைமையில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். வனத்துறை பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், கொத்தடிமை ஒழிப்பு தின உறுதிமொழி எடுக்கப்பட்டு விழிப்புணர்வு கையொப்ப இயக்கமும் தொடங்கப்பட்டது.

News February 10, 2026

ஸ்தம்பித்த தாம்பரம்!

image

தாம்பரம் அடுத்த இரும்புலியூரில் நேற்று (பிப்.9 )விபத்தில் சிக்கிய கார் 5 மணி நேரத்திற்கும் மேலாக அகற்றப்படாமல் கிடந்ததால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். கார் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் பேருந்து மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. 5 மணி நேரத்திற்கு பிறகு பெருங்களத்தூர் – தாம்பரம் சாலையில் போக்குவரத்து சீரானது.

error: Content is protected !!