News February 5, 2026

தி.கோடு அருகே மர்ம மரணம்: போலீஸ் விசாரணை!

image

திருச்செங்கோடு வீரராகவ முதலியார் தெருவைச் சேர்ந்த நகைத்தொழிலாளி பிரசன்னபூபதி (38), நேற்று சாலையில் நடந்து சென்றபோது திடீரென மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திருச்செங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News February 13, 2026

நாமக்கல்: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால்,நாமக்கல் மாவட்ட மக்கள் 04286- 281331 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

News February 13, 2026

நாமக்கல்: போஸ்ட் ஆபீஸ் வேலை: தேர்வு கிடையாது!

image

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

1. வகை: மத்திய அரசு

2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)

3. வயது: 18-40

4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380

5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி

6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)

7.மேலும் தகவலுக்கு:<> CLICK HERE<<>>
இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News February 13, 2026

நாமக்கல்லில் மீண்டும் ஒத்திவைப்பு!

image

நாமக்கல் மாவட்டம் மங்களபுரம் – தாண்டகவுண்டன்பாளையத்தில் இன்று (பிப்.13) நடைபெறவிருந்த ஜல்லிக்கட்டு போட்டி, தவிர்க்க முடியாத காரணங்களால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பிப்.7-ம் தேதி நடைபெறவிருந்து மாற்றப்பட்ட நிலையில், இன்று பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார் நிலையில் இருந்தும் போட்டி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதற்கான மாற்றுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!