News February 5, 2026

அரியலூர்: முகாமில் பெறப்பட்ட 24 மனுக்கள்

image

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி இ.கா.ப., அவர்கள் தலைமையில் வாராந்திர சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ்செல்வன் மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர் இரவிச்சந்திரன் அவர்கள் (மாவட்ட குற்ற பதிவேடு கூடம்) பொதுமக்களின் மனுக்களை விசாரணை செய்து உரிய மேல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்கள்.

Similar News

News February 9, 2026

அரியலூர்: பெண் குழந்தை உள்ளதா? CLICK HERE

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட சமூக நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

News February 9, 2026

அரியலூர்: நாளை பல்வேறு பகுதிகளில் மின்தடை!

image

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழப்பழூர், கூத்தூர், வெண்மணி, கூடலூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (பிப்.10) பராமரிப்பு பணிகள் நடைபெற்ற உள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெரும் அனைத்து பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் பண்ணுங்க!

News February 9, 2026

அரியலூர்: இருசக்கர வாகன விபத்து – ஒருவர் பலி

image

ஆண்டிமடம் அருகே சூரக்குழி கிராமத்தில் விருத்தாசலத்தில் இருந்து ஆண்டிமடம் நோக்கி வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து திடீரென சென்டர் மீடியினில் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் வாகனம் ஓட்டிய இளைஞர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

error: Content is protected !!