News February 5, 2026
குமரி: ஆசிட் வீச்சில் பார்வையிழப்பு; 10 ஆண்டு சிறை

பண்டாரவிளையைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் சேவியர். தொழிலாளியான இவருக்கும் ஆட்டோ டிரைவரான ஜான் பேபிக்கும் ஏற்பட்ட விரோதத்தில் ஜான் பேபி, பிரான்சிஸ் சேவியர் மீது ஆசிட் ஊற்றினார். இதில் பிரான்சிஸ் சேவியர் வலதுகண் பார்வை பறிபோனது. திருவட்டாறு போலீசார் இது தொடர்பாக பதிவு செய்த வழக்கை பத்மநாதபுரம் உதவி அமர்வு நீதிமன்றம் விசாரித்து, நேற்று ஜான் பேபிக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5,000 அபராதம் விதித்தது.
Similar News
News February 14, 2026
குமரி மக்களுக்கான இலவச சட்ட உதவி Whatsapp எண்!

கன்னியாகுமரி மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. மத்திய அரசின் 72177 11814 என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!
News February 14, 2026
கன்னியாகுமரி : ஒரே அழைப்பில் ஓடி வரும் லைன்மேன்!

இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் திருச்சி மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன்மேன் உங்கள் வீடு தேடி வருவார். இதை அனைவருக்கும்SHARE பண்ணுங்க!
News February 14, 2026
அணைகளில் தண்ணீர் திறந்து விட வாய்ப்புகள் இல்லை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகளில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தற்போது 2-வது பருவ நெல் பயிருக்கு மார்ச் மாதம் வரை விவசாயிகள் தண்ணீர் கேட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது அணைகளில் உள்ள தண்ணீர் மார்ச் 15 வரை மட்டுமே போதுமானதாக இருப்பதால் அதன் பின்னர் அணைகளில் திறந்து தண்ணீர் திறந்து விட வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


