News February 5, 2026

ராம்நாடு: ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

image

இராமநாதபுரம் மாவட்டம், செகுடி கிராமத்தை சேர்ந்த கணேசன் மகன் விஜய காந்த் (40) என்பவர் திருப்பூரில் வசித்து வந்தார். அங்கு குடும்பத்தில் ஏற்பட்ட கடன் பிரச்சனை காரணமாக சொந்த ஊருக்கு திரும்பி வந்து நேற்று செகுடி காளி கோவில் அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவாடனை காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கபட்டு உடல் திருவாடானை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டது.

Similar News

News February 9, 2026

இராம்நாடு: பெட்ரோல் குண்டு வீச்சு; இருவர் கைது!

image

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ரயில்வே பீடரோடு பகுதியில் சங்கு கடை நடத்தி வரும் குமரன்குருவின் கடை மீது சனிக்கிழமை இரவு 9.45 மணியளவில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சங்கு மூட்டைகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் நேதாஜி நகரைச் சேர்ந்த பார்த்திபன், கோவிந்தராஜ் ஆகிய இருவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

News February 8, 2026

BREAKING இராம்நாடு: லஞ்சம் வாங்கிய VAO கைது!

image

ராமநாதபுரம், புதுமடம் கிராமத்தில் விஏஓவாக பணியாற்றுபவர் அனுராஜ். இவரிடம் ஒரு நபர் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய அணுகி உள்ளார். அப்பொழுது தனக்கு ரூ.5000 லஞ்சம் தர வேண்டும் என கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த நபர் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் தகவல் தெரிவித்தின் பேரில் ரசாயனம் தடவிய ரூ.5000யை கிராம நிர்வாக அலுவரிடம் கொடுத்துள்ளார். உடனடியாக லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர்.

News February 8, 2026

இராம்நாடு: Driving Licence வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

இராம்நாடு மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <>LINK<<>>-ல்சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்

error: Content is protected !!