News February 5, 2026
திண்டிவனம் அருகே கிணற்றில் விழுந்து பலி!

விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த நாவல்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரா(60). இவர், சம்பவத்தன்று இயற்கை உபாதை கழிக்க வயல்வெளி பகுதிக்குச் சென்றார். அப்போது நிலை தடுமாறிய அவர், அங்கிருந்த கிணற்றில் விழுந்து, மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து ஒலக்கூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News February 8, 2026
விழுப்புரம்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

விழுப்புரம் மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE IT
News February 8, 2026
திண்டிவனத்தில் இளம் பெண் பரிதாப பலி!

திண்டிவனம் வட்டம், ஏப்பாக்கம் மேட்டுத் தெருவைச் சேர்ந்த கொசல்யா (34) என்பவர் வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து அவரை மீட்டு குடும்பத்தினர் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். இதுகுறித்து ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 8, 2026
விழுப்புரம்: மாமியார் அடித்து கொலை.. மருமகன் கைது

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஆனத்துார் கிராமத்தை சேர்ந்தவர் சீனுவாசன் மனைவி தனலட்சுமி. இவர், திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பாவந்துாரில் உள்ள மகள் வீட்டிற்கு சென்ற போது மீனாவிற்கும் மருமகன் சிவாவிற்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சிவா ஆத்திரத்தில் மீனாவைத் தாக்கிய போது அதை தடுக்க சென்ற மாமியார் தனலட்சுமி தலையில், தாக்கிய நிலையில் மயங்கி விழுந்தார். தனலட்சுமி உயிரிழந்த நிலையில் சிவாவை கைது செய்தனர்.


