News February 5, 2026
திமுக அரசின் ₹700 கோடி ஊழல்: அன்புமணி

திருவான்மியூர்-உத்தரண்டி 4 வழி உயர்மட்ட சாலை ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். ₹2,100 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை ஐதராபாத் நிறுவனத்திற்கு DMK அரசு வழங்கியதாகவும், ஆனால் ₹700 கோடி குறைவாக கோரப்பட்ட ஒப்பந்தபுள்ளியை திட்டமிட்டு நிராகரித்துள்ளனர் எனவும் சாடியுள்ளார். இதன் பின்னணியில் ஊழல் நடந்திருப்பதை யூகிக்க முடிவதால், CBI விசாரணை தேவை என்று வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News February 16, 2026
தமிழ்நாட்டின் தேர்தல் தேதி.. வெளியானது UPDATE

TN-ல் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.23-ம் தேதி வெளியாகும் என மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்திருக்கிறார். இதனையடுத்து, வரும் 26-ல் <<19152692>>CEC ஞானேஷ் குமார்<<>> தமிழகம் வந்து உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். அதன்பிறகு, இம்மாத இறுதியில் (அ) மார்ச் தொடக்கத்தில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதியை ECI அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெடியா இருங்க வாக்காளர்களே!
News February 16, 2026
தவெக சார்பில் நயினார் மீது புகார்!

விஜய் – த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நயினார் நாகேந்திரன் மீது தவெக வழக்கறிஞர் கமிஷனர் ஆபிஸில் புகார் அளித்துள்ளார். நயினார் பேசியதை அரசியல் தலைவர்கள் பலரும் விமர்சித்த நிலையில், த்ரிஷா இன்று கண்டன அறிக்கை வெளியிட்டார். அதைத்தொடர்ந்து நயினார், தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்தாா். இந்நிலையில் தவெக சார்பில் நயினார் மீது புகாரளிக்கப்பட்டுள்ளது.
News February 16, 2026
நகைக் கடன்.. மக்களுக்கு அதிர்ச்சி

அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் நகைக் கடனை புதுப்பிப்பதில் சிக்கல் இருப்பதாக பொதுமக்கள் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நகைக் கடன் ஓராண்டு முடியும்போது, வட்டியை மட்டும் கட்டிவிட்டு கடனை புதுப்பிக்க வங்கி அதிகாரிகள் மறுப்பதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். முழுத் தொகையையும் செலுத்தி நகையை மீட்குமாறு நெருக்கடி கொடுக்கப்படுவதாகவும் புகார் கூறுகின்றனர். உங்க பகுதியிலும் இந்த பிரச்னை உள்ளதா?


