News February 5, 2026
ஆதிதிராவிடர் பழங்குடியின இளைஞர்களுக்கு பயிற்சி – ஆட்சியர்

தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இப்பயிற்சிக்கான கால அளவு மூன்று மாதங்கள் ஆகும். மேலும் சென்னையில் உள்ள விடுதியில் தங்கி படிக்கும் வசதி மற்றும் உணவுக்கான செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும். இப்பயிற்சியில் சேருவதற்கு www.tahdco.com இணைய தளத்தில் விண்ணப்பிக்குமாறு குமரி மாவட்ட ஆட்சியர் இன்று கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News February 12, 2026
குமரி மக்களே உங்க போன்ல இந்த நம்பர் இருக்கா?

குமரி மாவட்ட மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்: 1.தீயணைப்புத் துறை – 101 2.ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 3.போக்குவரத்து காவலர் -103 4.பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 5.ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 5.சாலை விபத்து அவசர சேவை – 1073 6.பேரிடர் கால உதவி – 1077 7.குழந்தைகள் பாதுகாப்பு – 1098 8.சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 9.மின்சாரத்துறை – 1912. எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.
News February 12, 2026
கன்னியாகுமரியில் கனமழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் (பிப்.15) ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாளை (பிப்.13) நெல்லை, தென்காசி, தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். SHARE IT..
News February 12, 2026
களியக்காவிளையில் தமிழக பேருந்துகள் நிறுத்தம்

கன்னியாகுமரி மாவட்டம் ஒன்றிய அரசின் தொழிலாளர் வரைமுறை சட்டத்துக்கு எதிர்ப்பு. கேரளாவில் முழு அடைப்பு போராட்டத்தால் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து தமிழக பேருந்துகள் தமிழ்நாடு எல்லையான களியக்காவிளையில் நிறுத்தப்பட்டன. இதனால் பொதுமக்கள் கேரளா செல்ல முடியாமல் அவதிபட்டனர்.


