News February 4, 2026
சிவகாசி: அரசு பள்ளி ஆசிரியரை வெட்ட முயன்ற கும்பல்

சிவகாசி அருகே விஸ்வநத்தம் அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருபவர் கிருஷ்ணன் (39). இவர் தனது நண்பர் மாரிமுத்து மற்றும் இடத்தரகர்களுடன் நிலவிற்பனை குறித்து பேசிக்கொண்டிருந்த போது அங்கு வந்த பழையவெள்ளையாபுரத்தை சேர்ந்த செல்வம் உள்ளிட்ட சிலர் கிருஷ்ணனிடம் தகராறு செய்து அவரை அரிவாளால் வெட்ட முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 7, 2026
JUST IN கல்குறிச்சி: EPS மொரட்டு அடிமை – உதயநிதி தாக்கு..

கல்குறிச்சியில் நடந்து வரும் இளைஞரணி மாநாட்டில், உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, அண்மையில் தமிழ்நாட்டிற்கு வந்த மோடி, தமிழ்நாட்டிற்கு டபுள் இஞ்சின் சர்க்கார் வேண்டும் என்றார், அதற்கு பதிலடியாக நாங்கள் திராவிட மாடல் இஞ்சினை வைத்து 11.19 வளர்ச்சியை எட்டிவிட்டோம், எடப்பாடி பழனிசாமிதான் இப்போது இந்தியாவின் மொரட்டு அடிமை என்றும் பாஜகவின் கிளையாக இருந்த அதிமுக இன்று பாஜகவின் இலையாக மாறியுள்ளது என கூறினார்.
News February 7, 2026
விருதுநகர் மக்களே… இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க..

1. டாக்டர் என்.ஓ.சுகபுத்ரா இ.ஆ.ப மாவட்ட ஆட்சியர் 9444184000
2. இரா.ராஜேந்திரன் மாவட்ட வருவாய் அலுவலர் 04562-252348
3. டி.கண்ணன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 9498101455
இந்த முக்கியமான தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணி உதவுங்க…
News February 7, 2026
விருதுநகர்: அரசு அலுவலகத்தில் லஞ்சம் கேட்டால்..!

நில அளவை, பட்டா மாற்றம், வரி வசூல், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற நாம் தாலுகா அலுவலகம் செல்ல வேண்டிய தேவை உள்ளது. இந்நிலையில் தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் தங்கள் பணியை சரியாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால், விருதுநகர் மாவட்ட மக்கள் 04562-230023 or 94450-48894 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!


