News February 4, 2026

தருமபுரியில் மூதாட்டியிடம் துணிகரம்!

image

பாப்பிரெட்டிப்பட்டி அருகே முள்ளிகாடை சேர்ந்த மூதாட்டி காளியம்மாள் (75). இவர் நேற்று முன்தினம் (பிப்.2) முள்ளிக்காடு மலை அடிவாரத்தில் கோயிலுக்கு சென்று திரும்பி வந்து கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த மர்ம நபர், மூதாட்டியை கீழே தள்ளி காதில் அணிந்திருந்த நகையை பறித்து தப்பினார். இதில் காயமடைந்த மூதாட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News February 19, 2026

தருமபுரியில் இங்கு மட்டும் உள்ளூர் விடுமுறை!

image

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் மற்றும் நகரத்தில் அருள்மிகு புதூர் பொன்மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற உள்ளது. இந்த நிலையில் (பிப்.25) ஆம் தேதி புதன்கிழமை பாலக்கோடு வட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுகட்டும் வகையில் 07.03.2026 (சனிக்கிழமை) பணிநாளாக அறிவிக்கப்படுகிறது.

News February 19, 2026

தருமபுரி: மெடிக்கலில் மாத்திரை வாங்குவோர் கவனத்திற்கு!

image

சமீப காலங்களில் காலாவதியான மருந்துகள் & தவறான மருந்துகள் காரணமாக உயிரிழப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது. ஒருவேளை நீங்கள் பயன்படுத்திய மருந்தினால் ஆபத்து இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், தாமதிக்காமல் 1800-180-3024 என்ற எண்ணில் புகார் செய்யவும். இந்த புகாரின் மூலம், குறிப்பிட்ட மருந்து ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடு இருப்பின் அந்த மருந்து தடை செய்யப்படும். அல்லது அபராதம் விதிக்கப்படும். ஷேர்!

News February 19, 2026

மஜக தேர்தல் பணி ஆலோசனைக் கூட்டம்

image

தருமபுரி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட தேர்தல் பணி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் அரூரில் நேற்று (பிப்.18) நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் எம்.இம்ரான் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர், இளைஞரணி மாவட்ட செயலாளர் அசாரூதின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாநில துணை செயலாளர் ஏ.ஜெ.எஸ்.தாஜீதீன் கலந்து கொண்டு தேர்தல் பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

error: Content is protected !!